Skip to main content

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.

குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads

இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது.

கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நேற்று காலை சுமார் 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படாததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைகளுடனும் பள்ளி, கல்லூரிகளுக்கு சிரமத்துடன் சென்றனர்.

மழையால் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் சிரமமடைந்தனர்.
மேலும், அதிகளவில் குளிர்காற்று வீசுவதால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பலருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

விவசாயிகள், சிறு வியாபாரிகள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். விவசாயிகள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வர முடியாமலும், பூக்களை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாமலும் சிரமமடைந்தனர்.

குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
மேலும் விவரங்களுக்கு ➜ https://bit.ly/kushishoppingvideo

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 21.2 மிமீ மழை பதிவாகியிருந்தது. இதேபோல் ராயக்கோட்டை-17 மிமீ., போச்சம்பள்ளி-13.8 மிமீ., பாரூர்-12 மிமீ., பெனுகொண்டாபுரம்-10.2 மிமீ., நெடுங்கல்-9 மிமீ., அஞ்செட்டி-5.4 மிமீ., சூளகிரி-5 மிமீ., தேன்கனிக்கோட்டை-3.6 மிமீ., கிருஷ்ணகிரி-3.6 மிமீ., ஓசூர்-2.2 மிமீ என மொத்தம் 103 மிமீ மழை பதிவாகியுள்ளது.



கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு 753 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 177 கனஅடியும், தென்பெண்ணை ஆற்றில் 705 கனஅடி தண்ணீர் என 882 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல்

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், 41 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 580 கனஅடி தண்ணீர், முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையான் நோய் தாக்குதலால் நெற்பயிரில் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தற்காக வேளாண்மை அலுவலர்கள் மருந்துகள் தெளிக்க ஆலோசனைகள் வழங்கி, மருந்துகள் தெளித்தும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 4,100 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நெல்லில் புகையான் தாக்குதல் அதிகரித்தது. மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. விளம்பரம் குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ இங்கே கிளிக் செய்யவும்  இதனால் மேலும் நெற்பயிர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து அகற்றிவிட்டோம். சில இடங்களில் தீயிட்டு அழித் தனர். புகையான் நோயால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற உத்தரவு

கிருஷ்ணகிரி: மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. விளம்பரத் தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும்   கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓசூர்- சேலம் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேலுமலை, குருபரப்பள்ளி மேம்பாலம், சிக்காரிமேடு, வெங்கடாபுரம், ஆவின் மேம்பாலம், திம்மாபுரம், ஒரப்பம், ஒப்பதவாடி, கண்ணன்டஅள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, மழை காலத்தில் ஏற்பட்ட சாலைகளை சீரமைப்பது, நெடுஞ...