Skip to main content

கிருஷ்ணகிரி - 300 ஆண்டுகள் பழமையான போர்வாள் காட்சிக்கு வைப்பு


கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழமையான போர்வாள் காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 300 ஆண்டு பழமையான போர்வாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பொருள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மாதம் 300 ஆண்டு பழமையான போர் வாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் பழங்காலந்தொட்டே ஒரு எல்லைப்புற பகுதியாகும். இது ஒரு முல்லைநிலப் பகுதியாகவும் இருப்பதால், கால்நடைகளுக்கான சண்டைகள் முதல் நாட்டை விரிவுபடுத்த செய்யும் பெரும் போர்கள் வரை நடந்த மாவட்டமாக விளங்குகிறது.

இப்போர்களுக்கு வில் - அம்பு முதல், பீரங்கி வரை பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது போர் வாள் ஆகும். வாள் என்பது பொதுவாக இரும்பினால் ஆன கூரிய விளிம்பு கொண்ட நீளமான அலகுடைய குத்துவதற்கும், வெட்டுவதற்கும் பயன்படும் ஆயுதமாகும். இதன் வடிவமானது பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு காலகட்டங்களுக்கும் ஏற்ப வேறுபட்டு காணப்படும்.

Masters Group (NEET / JEE) Academy, Dharmapuri
WhatsApp us ➜ Click Here

சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது இரும்புக் காலத்துக்கும் முந்தைய வெண்கலப் பண்பாட்டுக் காலத்திலேயே வாள் தோன்றியது. வாட்களை குறுவாள், உடைவாள் அல்லது குத்துவாள் என்றும் போர்வாள் என்றும் வகைகளாகப் பிரிப்பர். இரண்டும் போர்க் கருவிகள் என்றாலும் சமயத்துக்கு ஏற்றவாறு இவை பயன்படுத்தப்படும். அருகில் சென்று குத்த குத்துவாளும், குதிரை மேலிருந்து சண்டையிட பட்டாக்கத்தி என்னும் போர்வாளும் பயன்படும்.

அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்னும் இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் இத்தகைய இரும்பு வாள்கள் கிடைத்துள்ளன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தற்போது காட்சிப் படுத்தப்பட்டுள்ள வாள் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைசாமி என்பவர் தங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து வீட்டில் வைத்து வழிபட்டு வந்ததாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

 இந்த வாள் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்தியதாக தெரியவருகிறது. ஆனால், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்று காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்

FOR ADVERTISING ON OUR SOCIAL MEDIA PLATFORMS, CONTACT US VIA WHATSAPP

Comments

Popular posts from this blog

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளியில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர். கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார். விளம்பர தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும் இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்...

25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது

சந்தூர் தடுப்பணை, கிருஷ்ணகிரி மாவட்டம் கனமழையால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் அருகேயுள்ள தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது. இதை யடுத்து, அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடைவிடாத கனமழை பெய்தது. மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள தடுப்பணை ஓடையில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் MASTERS GROUP (NEET /JEE) ACADEMY, DHARMAPURI WhatsApp us for Admissions ➜ CLICK HERE பெருக்கெடுத்து ஓடியது. இங்கிருந்து கூச்சானூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், அங்கிருந்து பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு செல்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் பூக்கள் தூவியும், ஆடுகள் பலியிட்டும் வழிபட்டனர். மேலும், பாளேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைக்கோடி ஏரியான கூச்சானூர் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வ...