Skip to main content

கிருஷ்ணகிரி மாவட்டம் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்


கிருஷ்ணகிரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 171 வார்டுகளுக்கு 424 ஓட்டுச்சாவடிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் வரைவு பட்டியல் தயார் நிலையில் உள்ளது. 


கிருஷ்ணகிரி: 
இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி அன்மையில் வெளியிட்டார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தம், 171 வார்டுகளுக்கு, 424 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடக்க உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 3 லட்சத்து, 57 ஆயிரத்து, 415 பேர் வாக்களிக்க உள்ளனர்.

குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
வாட்ஸ்அப் தொடர்புக்கு - இங்கே கிளிக் செய்யவும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் விளம்பர படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், தேர்தல் தனி தாசில்தார் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் உடனிந்தனர்.

Comments

Popular posts from this blog

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளியில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர். கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார். விளம்பர தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும் இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்...

25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது

சந்தூர் தடுப்பணை, கிருஷ்ணகிரி மாவட்டம் கனமழையால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் அருகேயுள்ள தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது. இதை யடுத்து, அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடைவிடாத கனமழை பெய்தது. மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள தடுப்பணை ஓடையில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் MASTERS GROUP (NEET /JEE) ACADEMY, DHARMAPURI WhatsApp us for Admissions ➜ CLICK HERE பெருக்கெடுத்து ஓடியது. இங்கிருந்து கூச்சானூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், அங்கிருந்து பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு செல்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் பூக்கள் தூவியும், ஆடுகள் பலியிட்டும் வழிபட்டனர். மேலும், பாளேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைக்கோடி ஏரியான கூச்சானூர் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வ...